Wednesday, October 29, 2008

461. 'இட்லிவடை' பிடிக்காத தமிழர்கள் உண்டா ?

வலையுலக "வெட்டி ஒட்டி"யும், பாடிகார்ட் முனீஸ்வரனின் நெருங்கிய நண்பரும், மஞ்சக்கலர் 'பஞ்ச்' கருத்துகளுக்கு பிரசித்தி பெற்றவரும், ஆட்டோ வுக்கு பயந்து அனானிமஸாக வனவாசத்தில் இருப்பவரும் ஆன உலகபுகழ் "இட்லிவடை", அவரது வலைப்பதிவின் 5 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, பதிவொன்று எழுதித் தருமாறு என்னைக் கேட்டுக் கொண்டார்.   நான் எழுதித் தந்ததை அவரது வலைப்பதிவில் இன்று பதிப்பித்துள்ளார்.  ஒரு ரெஃபரென்ஸுக்கு வேண்டி, அந்த மேட்டரை எனது இங்கே (எனது வலைப்பதிவில்) பதிவாக இடுகிறேன்.
*************************************************

எனக்கு ரத்னா கேப் இட்லிவடையையும் பிடிக்கும், தமிழ் வலையுலக இட்லிவடையையும் பிடிக்கும்:) இன்று (27-10-2008), அதாவது 'தீபாவளி' அன்று, ஐந்தாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இட்லிவடையாருக்கு முதலில் "பாரா"ட்டுகளும், வாழ்த்துகளும்...  இந்த 5 வருடங்களாக, கிருஷ்ண பரமாத்மா மகாபாரதத்தில் அடித்த லூட்டிக்கு இணையான ஒன்றை இவர் தமிழ் வலைப்பதிவுலகில் அடித்து வருகிறார் ;-)

முதலில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.  வலைப்பதிவு பிரபலங்கள் கூட "என்னை இட்லிவடை என்று நினைக்கிறார்கள்" என்ற விஷயத்தை உள்ளுக்குள் சற்று பெருமையாக உணரும் / அதை வெளிப்படுத்தவும் செய்யும் உளவியலிலும், இ.வ-வின் அயராத உழைப்பிலும், தொழில்நுட்பத் திறமையிலும் தான் அவரது வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது :) அவரது வலைப்பதிவின் side bar சமாசாரங்களையும், அடிக்கடி மாறும் கொண்டையையும் (அதாங்க, அவரது கிராபிக் Blog Header!) பார்க்கும்போது, அவர் மென்பொருள் வல்லுனர் என்று சொல்ல முடியும்.  இ.வ வலைப்பதிவின் பிளாக் கவுண்டர், 12 லட்சத்து 38 ஆயிரச் சொச்ச எண்ணிக்கையை காட்டுகிறது.  தமிழில் எழுதப்படும் ஒரு வலைப்பதிவுக்கு, இத்தகைய பரந்த வாசகர் வட்டத்தை இ.வ தக்க வைத்திருப்பது, மிக நிச்சயமாக ஒரு சாதனையே!

இட்லிவடையை நான் வாசிக்க ஆரம்பித்தது, நான் வலைப்பதிவு தொடங்கிய சமயத்திலிருந்து, அதாவது ஜூலை 2004-லிலிருந்து.  "பத்ரிக்கு Temporary ரஜினி ரசிகனின் கடிதம்" என்று ஆகஸ்ட் 2004-இல் ஒரு பதிவு போட்டு கொஞ்சம் சர்ச்சையாகியவுடன், அருண் வைத்தியநாதன் வேண்டுகோளுக்கிணங்க அப்பதிவை இ.வ பெருந்தன்மையாக நீக்கி விட்டார். அவர் மேல் சற்று மதிப்பும் வந்தது, தொடர்ந்து இந்த 5 ஆண்டுகளில் (தன் பதிவுகளுக்கு காட்டமான மறுமொழிகள் வந்தாலும்) அமைதியாகவும், நகைச்சுவையாகவும் பதிலளித்து வருகிறார்.  

இ.வ வுக்கு இயல்பாக நகைச்சுவை (பாடிகாட் முனீஸ்வரன் கடிதங்கள்!) கை கூடி வருவதும், அவருக்கு வெட்டி வேலை (cut & paste) பிடித்திருப்பதும், நல்ல கட்&பேஸ்ட் சமாசாரங்களை அவர் கவனத்திற்கு எடுத்து வர பல "செகரட்டரிகள்" அவருக்கு இருப்பதும், எதிலும் ரொம்ப தீவிரம் இல்லாமல் இயல்பாக இருப்பதும் இட்லிவடையின் நீண்ட வலையுலக இன்னிங்க்ஸுக்கு சில காரணங்கள் என்று நினைக்கிறேன்!

ஆரம்ப காலத்தில், நான் என் பதிவுகளில் (ஆச்சரியக்குறி) "!" அதிகம் பயன்படுத்தியதை வைத்து என்னை பயங்கரமாக ஓட்டியிருக்கிறார், அதன் விளைவாக நானும் "!"ஐ சற்று குறைவாகவே பயன்படுத்தி வருகிறேன் :) ஜெயேந்திரர் கைதின்போது நான்  எழுதிய பதிவுக்கு தனது முதல் பின்னூட்டத்தை இட்டு, எனது இப்பதிவின் கருத்துகளுடன் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், தனது கருத்துகளை டாப் 10 - ஜெ ஜெ சில குறிப்புகள் என்ற இடுகையில் கூறியிருப்பதாகவும் எழுதியிருந்தார். இ.வ வின் அந்தப் பதிவில் "கிருமி கண்ட சோழன்" "ரங்கராஜன் நம்பி"க்கு செய்த அநியாயத்திற்கு ஒருவர் பொங்கியெழுவதற்கு இணையான ஒரு கோபம் தெரிந்தது ! That was our first & only direct encounter :)

இட்லி வடையார் வலதுசாரி ஆதரவாளர் என்று சொல்வதில் பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை.  தமிழ் வலையில் எழுதுபவர்களில் 80% பேர் வலதுசாரி சிந்தனை உடையவர்கள் தான், எல்லாரும் ஒத்துக் கொள்வதில்லை, அதான் மேட்டர்!!!   எதிர்கருத்து உடையவர்களை ராவுவதற்கும், சில சமயங்களில் 'கில்மாஸ்' ஃபோட்டோ  போடுவதற்கும் அனானிமஸாக இருப்பது இ.வ வுக்கு உதவியாக இருக்கிறது.  அதோடு, இ.வ வின் resourcefulness என்னை மிகவும் கவர்ந்த விஷயம்!  அதற்கு உதாரணம், ஒரு "மாபெரும்" வலைப்பதிவு சந்திப்பு சென்னையில் நடந்தபோது, அங்கு எடுத்த புகைப்படங்களை சந்திப்பு நடந்து கொண்டிருக்கும்போதே இட்லிவடை வலையேற்றியதைச் சொல்லலாம் :)  அவருக்கு எப்படி இவ்வளவு (தினம் update செய்வதற்கு) நேரமும், உந்துதலும் கிடைக்கிறது என்பது புதிராகவே உள்ளது.  இட்லிவடை, நிறைய சொத்து இருக்கிற, வேலைக்குப் போகத் தேவையில்லாத ஆளாக இருக்கலாம் எனபது என் அனுமானம் ;-)

2005-ஆம் ஆண்டு இறுதியில் இட்லிவடை எழுதிய 2005 டாப் டென் (- 2) வலைப்பதிவுகள் என்ற இடுகை satire வகை நகைச்சுவைக்கு ultimate எடுத்துக்காட்டு என்று கூறுவதில் எனக்கு தயக்கம் இல்லை.   தமிழ்வலையின் Alltime டாப்-5 நகைச்சுவைப் பதிவுகளில் அப்பதிவுக்கு என்றுமே இடமுண்டு, குறிப்பிட்ட பதிவில் அவர் என்னை கலாய்த்திருந்தாலும் கூட :)  அப்போது அவ்விடுகையை வாசிக்காதவர்கள் இப்போது வாசித்து விட பரிந்துரை செய்கிறேன்!

எனது வலைப்பதிவின் 301-வது இடுகையை,  என்னைப் பற்றிய ஒருவிமர்சனப் பதிவாக இட்லிவடை எழுதித் தந்தார்!  மிக நேர்மையான விமர்சனம் அது.  இறுதியாக, இட்லிவடை மேல் எல்லாருக்கும் +/- விமர்சனம் இருக்கும், அதே சமயம் No one can ignore him/her and therein lies இட்லிவடை's popularity and success !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, October 22, 2008

460. மும்பை வன்முறையின் பின்விளைவுகள்

நேற்று எழுதிய பதிவில் சொன்னபடி, போலீசார் நவநிர்மாண் சேனா குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டதில், இன்று மும்பையில் பெரிய அளவில் பிரச்சினை எதுவும் இல்லை என்று தெரிகிறது.  இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பில்லை.  மேலும், அவரை கைது செய்தால் மும்பையில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும் என்றூ மகாராட்டிர அரசு பயந்தது போல, (ராஜ் தாக்கரேக்கு பொது மக்களிடையே ஆதரவு இல்லாததால்!)  இன்று எதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்வே தேர்வு எழுத வந்த வடக்கிந்திய இளைஞர்கள் மீது நேற்று MNS குண்டர்கள் நிகழ்த்திய வன்முறையில், ஒரு பிகாரி இளைஞர் இறந்து போனார்.  அதன் தொடர்ச்சியாக, மும்பையிலிருந்து பாட்னாவுக்கு திரும்பி வந்த மற்ற இளைஞர்கள், ரயில்வே நிலையத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர்.   பிரிவினைவாதத்தை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், இது போல சங்கிலித் தொடராக பல வன்முறை நிகழ்வுகள் ஏற்படக்கூடிய அபாயத்தை என் நேற்றைய பதிவில் சுட்டியிருந்தேன்.  நல்ல வேளை, வட இந்தியாவில் வேறெங்கிலும் கலாட்டா எதுவும் இல்லை!

ஒரு நல்ல செய்தியையும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது.  அலகாபாத் மற்றும் பாட்னாவில் வசிக்கும் வட இந்தியர்கள், "காந்திகிரி" (அகிம்சை) வழியை பின்பற்ற முடிவு செய்து, அங்கு வசிக்கும் மராத்தியர்களுக்கும், அங்கிருந்து மும்பைசெல்லும் ரயில்களில் பயணம் செய்யும் மராத்தியர்களுக்கும், பூவும் இனிப்புகளும் தந்து, தாங்கள் ஒற்றுமையையும், அமைதியையும் விழைவதாகக் கூறி நல்லிணக்கத்திற்கு வழிவகை செய்துள்ளனர் !

எ.அ.பாலா

Tuesday, October 21, 2008

459. ராஜ் தாக்கரே என்கிற பாசிச அரக்கன்

மகாராட்டிர நவநிர்மாண் சேனா (MNS) என்கிற அராஜக/பாசிச அமைப்பின் தலைவனாக, மகாராட்டிர மாநிலத்தில் வாழ்ந்து வரும் பிற மாநிலத்தவரை கடந்த பல மாதங்களாக அச்சுறுத்தியும், அவர்கள் மீது வன்முறையைத் தூண்டி விட்டும் அரசியல் லாபம் தேடி வரும் ராஜ் தாக்கரேக்கு இப்போது மறை சுத்தமாக மறை கழண்டு விட்டது அவரது பேச்சின் மூலம் தெரிகிறது !

சமீபத்தில், மும்பையில் ரயில்வே பணிக்கு தேர்வு எழுத வந்த பிற மாநிலத்தவரை MNS குண்டர்கள் கண்மூடித்தனமாக தாக்கியதைத் தொடர்ந்து, அவரை கைது செய்ய அரசு ஆலோசித்தபோது, "என்னை கைது செய்தால் பயங்கரமான விளைவுகள் ஏற்படும்" என்றும், "என்னைக் கைது செய்தால், மகாராட்டிரமே பற்றி எரியும்" என்றும் ராஜ் தாக்கரே பிதற்றியுள்ளது!  மேலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில், மகாராட்டிர கொங்கனில் நிலங்களை மராத்தியர் அல்லாதவர்களுக்கு விற்க வேண்டாம் என்றும் அந்த அரை லூசு பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது :(

இன்று ராஜ் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மும்பையில் வன்முறை வெடித்துள்ளது.  MNS குண்டர்கள் தூண்டி விடும் கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினால் தான், அரசியல் லாபத்துக்காக பிரிவினைவாதத்தையும், வன்முறையையும் கருவிகளாக பயன்படுத்த விழையும் போக்குக்கு சாவுமணி அடிக்க முடியும்;  சிலபல அரசியல்வியாதிகளுக்கும் பாடமாக அமையும். 

ஒரு எழவுக்கும் லாயக்கிலாத ராஜ் தாக்கரே போன்ற அரசியல்வியாதிகளுக்கு வேண்டாத விளம்பரம் தந்து, அவர்களின் உருப்படாத பேச்சுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்கள் கட்டுப்படுத்த இயலா அரக்கர்களாக உருவெடுப்பதற்கு மீடியாவின் sensational journalism அணுகுமுறையும் ஒரு மிக முக்கியக் காரணம் என்றால் அது மிகையில்லை.  சமீபத்தில் அமிதாப் சாதாரண அப்பண்டிசிட்டிஸ் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றதை நேரடி ஒளிபரப்பு செய்து மீடியா அடித்த அருவருப்பான கூத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம் :(

ஜனநாயகத்திற்கு விரோதமான இந்தப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும் !!

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails